R.Maheshwary / 2022 மார்ச் 14 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
பதுளையில் உள்ள சமையல் எரிவாயு முகவர் நிலையமொன்றிலிருந்து 1,64,000 ரூபாய் பெறுமதியான 14 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து, திட்டமிட்ட முறையில், ஒருங்கமைக்கப்பட்டு இந்த கொள்ளை முயற்சி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட சமையல் எரிவாயு அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைக்காக ஒதுக்கப்பட்டதாகவும் குறித்த முகவர் நிலைய உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
5 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
18 Jan 2026