Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மழையுடனான வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் 3 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
எல்ல, பசறை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் முதலாம் கட்டத்தின் கீழ் இந்தப் பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கற்பாறைகள் சரிதல், ஊற்று உருவாகுதல், நிலம் தாழிறங்கல் உள்ளிட்ட மண்சரிவுகளுக்கான அறிகுறிகள் காணப்பட்டால், குறித்த பகுதிகளிலிருந்து வௌியேறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
58 minute ago
2 hours ago