2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பெல்மதுளைக்குச் சென்ற பெண்ணை காணவில்லை

Kogilavani   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமாமகேஸ்வரி

இரத்தினபுரி, ரில்ஹேன தோட்டத்தைச் சேர்;ந்த அன்னம்மாள் (வயது 48)   என்பவரை, கடந்த 3ஆம் திகதி முதல் காணவில்லை என, அவரது மகன், காவத்தை பொலிஸில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்.

3 பிள்ளைகளின் தாயான அவர், ரில்ஹேன தோட்டத்துக்கு அருகிலுள்ள தனியார் தோட்டமொன்றில், தனது கணவருடன் இணைந்து கூலிவேலை செய்து வந்துள்ளார்.

தனக்கு சுகயீனமெனவும் வைத்தியசாலைக்குச் சென்றுவருவதாகவும் கூறி பெல்மதுளை நகருக்கு கடந்த 3ஆம் திகதிச் சென்ற அன்னம்மாள், இதுவரை வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம், காவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .