Freelancer / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு நேற்று மாலை ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக ஓரளவு பலத்த மழை பெய்தது.
இந்த மழை காரணமாக ஓடைகள் கால்வாய்கள்,நீர் நிலைகள் ஆகியன மீண்டும் புத்துயிர் பெற ஆரம்பித்துள்ளன.
இதே வேளை மழையுடன் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் பல பிரதேசங்களில் பனி மூட்டமும் நிலவுவதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .