Sudharshini / 2016 ஜனவரி 18 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
தம்புள்ளை, ஹபரண வீதியில் நேற்று (17) இடம்பெற்ற வாகன விபத்தில் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தன பிரியந்த குமார (40) என்பர் உயிரிழந்துள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் இருந்து தம்புள்ளை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எரிபொருள் எற்றிச் சென்ற பவுசர் ஒன்றுடன் மோதி இவ்விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்துடன் தொடர்புடைய பவுசர் வண்டியின் சாரதியை தம்புள்ளை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .