Princiya Dixci / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்
ஹட்டன் பன்மூர் தமிழ் வித்தியாலயத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன் கல்வி வலயத்தின் கோட்டம் - 1க்கான அலுவலக கட்டடம், மத்திய மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, நீர் விநியோகம், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, மீன்பிடி, சுற்றாடல் மற்றும் இந்து கலாசார அமைச்சர் ரமேஷ்வரனால் இன்று வெள்ளிக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் ரமேஷ்வரன் பெயர்பலகையை திரைநீக்கம் செய்து திறந்து வைப்பதையும் அருகில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ் மற்றும் பிலிப்குமார் ஆகியோர் இருப்பதையும் நிகழ்வில் கலந்துகொண்ட ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி செயலாளர், மேலதிக கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சிலரையும் மற்றும் இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.






6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago