2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 15 பேர் படுகாயம்

Gavitha   / 2017 மே 18 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ .ரமேஸ்,பி. சந்ரூ

நுவரெலியா, நானுஓயா ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுகளுக்கும் உட்பட்ட கட்டுமானை எனும் பகுதியில், இன்று (18) பிற்பகல், 2.30 மணியளவில் இடம்பெற்ற பஸ் விபத்தில், 15 பேர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து பட்டிபொல பகுதிக்குச் சென்றுக் கொண்டிருந்த, இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், வீதியை விட்டு விலகி, சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .