Kogilavani / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
அக்குறணை பிரதேச செயலக பிரிவிக்குள் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 35 பேருக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 135,000 ரூபாய் அபராதத் தொகையாக பெறப்பட்டுள்ளதாக அக்குறணை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
அக்குறணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அலவத்துகொடை, பலகடுவை, குருகொடை, தொடங்கொல்ல, வராகஸ்ஹின்ன, அக்குறணை நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் டெங்குக் காயச்சல் மிக வேகமாக பரவி வருகின்றது.
இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடிர் சோதனைகளின்போது 35 இடங்கள், டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டன.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago