Editorial / 2022 பெப்ரவரி 18 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் ஐந்து பிரதேசங்களில் முன்னறிவித்தல் இன்றி திடீரென நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
சுமார் 36 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (18) காலை 10 மணிமுதல் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்புக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர்குழாய் வெடித்துள்ளமையால், நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்பிரகாரம் கொழும்பு, 1, 7, 9, 10 மற்றும் கொழும்பு 12 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது, குறைந்த அழுத்தத்துடன் கொழும்பு -8க்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது.
48 minute ago
55 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
55 minute ago
3 hours ago
05 Nov 2025