Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
சுங்க வரி செலுத்தாது, சட்டவிரோதமானமுறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 30,000 சிகரெட்டுகளுடன், நீர்கொழும்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, மேற்படி சந்தேக நபர், நேற்று (22) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 20 இலட்சம் ரூபாய் என, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .