2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இந்திய மீனவர்கள் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து, சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இந்திய மீனவர்கள் நால்வர், இன்று (22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல் வளத்துறையின் மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களும் புதுக்கோட்டை - ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களெனவும், அவர் தெரிவித்தார்.

குறித்த நான்கு மீனவர்களும், நாட்டு படகொன்றில் வந்து, தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை, ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X