Princiya Dixci / 2022 மே 12 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.நிதர்ஷன், என்.ராஜ்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு, தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னால் இன்று (12) காட்சிப்படுத்தப்பட்டன.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் நேற்று முதல் ஆரம்பமாகின்ற நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆவண வெளியீட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளதுடன், ஆவணமாக்கலை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
17 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago