Freelancer / 2022 ஜூன் 20 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாணத்தில் சாதாரண தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கு முன்னால் இன்றைய தினமும் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உரிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும்.
அல்லது தமக்கான எரிபொருளை பெறுவதற்கு குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை ஒதுக்குமாறும் கோரியே இப்போராட்டம் இடம்பெற்றது.
இதேவேளை நேற்றைய தினமும் யாழ். மத்திய கல்லூரியில் எரிபொருள் வேண்டும் எனக் கோரி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)



2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago