Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம். றொசாந்த் / 2018 ஒக்டோபர் 29 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழில்.இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரையே நேற்று (28) மாலை மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த இளைஞனை கைது செய்யும் போது அவரிடமிருந்து இரண்டு வாள்களை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்தே இளைஞனை கைது செய்ததாகவும், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .