2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஊறனி கிராம மக்களுக்கு 30 வருடங்களுக்கு பின்னர் குடிநீர்

Super User   / 2012 ஒக்டோபர் 31 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர், ஊறனி கிராம மக்களுக்கு 30 வருடக்ளுக்கு பின்னர் குடிநீர் விநியோகம் இன்று புதன்கிழமை வலி கிழக்கு பிரதேச சபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புத்தூர், ஊறணி கிராம குடியேற்றத்திட்டம் ஆரம்பமான காலம் தொடக்கம் இன்று வரை அக்கிராம மக்கள்,  குடிநீரை பெறுவதற்கு 2 கிலோ மீற்றருக்கு அப்பால் சென்றே பெற்றனர்.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக பிரதேச வாழ் மக்களினால் வலி கிழக்கு பிரதேச சபையிடம் குடிநீர் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்ட்டது.

இதனையடுத்து  பிரதேச சபையினால் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாள் தோறும் குறித்த கிராமத்திற்கு 3,000 லீற்றர் குடிநீரினை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் அ. உதயகுமார் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .