2025 ஜூன் 21, சனிக்கிழமை

காணாமல் போனோர் தொடர்பில் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் 17ஆம் திகதி விசாரணை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

காணாமல் போனோர்கள் தொடர்பான தற்போதைய நிலமைகள் குறி;த்து ஆராயப்பட்டவர்களுக்கான விசாரணைகள் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி;.கனகராஜ் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனோர்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு அத்தாட்சி படுத்தப்பட்டவர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு தற்போதைய நிஇமைகள் குறித்து ஆராயப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டவர்களுக்கு இலங்கை மனித உரிமைகள் அதிகாரிகளினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விசாரணைகள் ஒவ்வொரு பொலிஸ் பிரிவுகளிலும் இடம்பெறவுள்ளன. அந்தவகையில், 17ஆம் திகதி யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு 1 - யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம், 18ஆம் திகதி யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு 3 கோப்பாய், சாவகச்சேரி, கொடிகாமம், 19ஆம் திகதி கே.கே.எஸ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு 3 - பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, 20ஆம் திகதி யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு - 2 ஊர்காவற்துறை, வட்டுக் கோட்டை, 21ஆம் திகதி  கே.கே.எஸ் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு 1 - அச்சுவேலி, இளவாளை ஆகிய பிரிவுகளில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .