2025 மே 21, புதன்கிழமை

நாவற்குழியில் மாணவி கிணற்றில் வீழ்ந்து மரணம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 16 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நாவற்குழி பகுதியில் பாடசாலை மாணவியொருவர்  நேற்று புதன்கிழமை கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமாகியுள்ளார்.

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயத்தில் தரம் 3இல் கல்வி கற்கும் அன்ரன் திலகா (வயது 9) என்ற மாணவியே இவ்வாறு மரணமானதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக இந்த மாணவியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .