Kogilavani / 2011 நவம்பர் 21 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்.குடாநாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்கள் பற்றிய முறைப்பாடுகள் தற்போது குறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீது இழைக்கப்படும் அநிதிகள் குறித்து பொலிஸார் விசேட கவனம் செலுத்துவதாகவும் அவர்களின் நடவடிக்கையின் காரணமாக யாழில். பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக அரச அதிபர் உறுதிபட தெரிவித்தார்
இதேவேளை பெண்கள் மீதான துஷ்பிரயேகங்களை முறையிடுவதற்கு மாவட்ட செயலகத்தில் ஒரு பிரிவு ஒன்றை ஆரம்பிப்பதாக முன்னைய காலங்களில் கூறிவந்தீர்கள். அந்த பிரிவு எப்போது ஆரம்பமாகும்? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த யாழ்.அரச அதிபர், யாழில் பெண்கள் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்த நிலையில் அப்பிரிவு தேவையில்லாத ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
13 minute ago
4 hours ago
4 hours ago
Pranhavan Tuesday, 22 November 2011 02:18 AM
பெண் thuspirayokam enraal murai idasolukireerkal aankalai thuspirayokam seiyhal enke murigiduvathu?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
4 hours ago
4 hours ago