2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கிந்துசிட்டி மயானத்திற்கு அருகில் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதால் டெங்கு நோய் பரவும் அபாயம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

சுன்னாகம் புத்தூர் வீதியில் உள்ள கிந்துசிட்டி மயானத்திற்கு அருகில் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுவதால் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தாம் பெறும் அசௌகரிங்களை எதிர்கொண்டு வருவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பருத்தித்துறை வீதியையும் சுன்னாகத்தையும் இணைக்கும் பிரதான வீதியான இவ்வீதியில் நாள் தோறும் பெரும் எண்ணிககையான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

கிந்துசிட்டி மயானத்திற்கு அருகில்; கொட்டப்படும் கழிவுப்பொருட்களால் இவ்வீதியில் துர்நாற்றம் வீசிவருவதுடன் பயணிகளும் பெறும் அளெசகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தற்போது பெய்துவரும் மழைக் காரணமாக நீர் தேங்கி நின்று டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கழிவுப்பொருட்களை கொட்டுவதற்கான குப்பைத் தொட்டியொன்றை அப்பகுதியில் அமைக்குமாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் இதுவரையும் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் குறித்த பகுதியில் கழிவுப்பொருட்கள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .