2025 ஜூன் 21, சனிக்கிழமை

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு குருநகரில் சிரமதான பணியும் குறுநாடக அரங்கேற்றமும்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 25 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(த.சுமித்தி)


உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 'மாற்றமுறும் குடியிருப்புக்களும் உருப்பெறும் வாய்ப்புக்களும்' எனும் தொனிப்பொருளில் உலக குடியிருப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் நோயல் ஜெயசந்திரன் தலைமையில் யாழ். குருநகர் 5 மாடி வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் ஒரு களமாக, 'மனித வாழ்வு பாதுகாக்கப்பட வேண்டியதும்' இளைஞர் சேவைமன்ற மாவட்ட அதிகாரி வினோதினி தலைமையில், வீதி நாடகம் இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்தில், தற்போது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படும் மது பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் எவ்வாறு அடிமைகளாகின்றார்கள், அதில் இருந்து இளைஞர்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பதை சித்தரிக்கும் வகையில் குறு நாடகம் சித்தரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .