2025 ஜூன் 19, வியாழக்கிழமை

எரிபொருள் நிலையத்தினை திறக்குமாறு கோரிக்கை

Super User   / 2013 மே 12 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில் புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு  நிலையத்தினை திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்த எரிபொருள் நிரப்பு  நிலையம் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகியும் இதுவரை திறக்கப்படாமையினால் அப்பகுதி மக்கள் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பரந்தன் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த எரிபொருள் நிலையம் அமைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படவில்லை.

குறித்த பகுதியில் யுத்தத்திற்கு பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தங்கள் எரிபொருள் தேவைகளுக்கு 10 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள விசுவமடு மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு  சென்று தங்கள் எரிபொருட்களைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தினால் அமைகப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினை உடனடியாக திறந்து பாவனையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .