2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

இந்திய இடதுசாரிகளுடன் இணைந்து போராட தயார்; டியூ

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 13 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய இடது சாரிகளுடன் இணைந்து போராட்டத்தினை முன்னெடுக்க தயாராக இருக்கின்றேன் என்று சிரேஷ் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

சிங்கள மக்களுடன் இணைந்து செயற்படாவிட்டால் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்;ப்பதற்கு வடக்கில் உள்ள முற்போக்கு வாதிகள் இணைந்து போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ். கொசி விருந்தினர் விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் போய்க்கொண்டிருக்கின்றது. எத்தனையோ போராட்டத்திற்கு பின்னர் வடமாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டி இருக்கின்றதுடன்,   சிறுபான்மை இனத்தின் பிரச்சினையினை தீர்ப்பது மட்டுமல்ல, ஜனநாயகத்தினையும் விஸ்தரிப்பதற்கு 13 ஆவது திருத்தம் முக்கியமான ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு வருமாறு பலமுறை அழைப்பு விடுத்திருந்தோம். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமரசத்திற்கு வர வேண்டிய தேவை இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமரசத்திற்கு வருவது தேசிய பிரச்சினையினை தீர்ப்பதன் ஒரு பகுதியாக அது அமையுமென்றும் அவர் கூறினார்.

இலங்கை அரசுடன் ஏனைய கட்சிகள் சமரசத்திற்கு வரும் நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் ஏன் சமரசத்திற்கு வரவில்லை என்பது தெரியவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதேவேளை, வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு வருகை தந்ததையிட்டு, அதை தான் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

யார் வெல்கின்றார்கள் என்பது பிரச்சினை அல்ல. வடமாகாணத்தில் ஜனநாயக அரசியல் சூழல் ஏற்படுத்த வேண்டும் என்பதே முக்கியமானதாகும்;.
அரசியல் தீர்வினை ஏன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. இது இந்திய அரசாங்கத்திற்கு ஏனைய கட்சிகளுக்கு சிக்கலை உருவாக்கவில்லையா?  என்றும் அவர் இதன் போது கேள்வி எழுப்பினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக தெற்கில் உள்ள சிங்கள பேரினாவதிகள் பெரும் மகிழச்சி அடைவதாகவும் அவர் சுட்டிக் காட்டினர்.

புத்தி ஜீவகள் மற்றும், படித்த அரசியல் தலைவர்கள் இருந்தும், தமிழ் தேசிய கூட்டமைப்பு இவ்வாறான அரசியல் விஞ்ஞாபனத்தினை வெளியிட்டமைக்கான காரணம் என்ன வென்று தெரியவில்லை.

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் அரசியல் உரிமைகளை பெற்றெடுக்க வாக்களிப்பதற்கு தார்மீக பொறுப்பு இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு இந்திய இடது சாரிகளுடன் இணைந்து போராட்டத்தினை முன்னெடுக்க தயாராக இருக்கின்ற இந்நிலையில், அழிவினை தவிர்ப்பதற்காக இந்தியா செல்லவில்லை என்றும்,  வாழ்வதற்காக இங்கு இருக்கின்றோம் என்றும் சுட்டிக் காட்டிய அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியாவிற்கு போகத் தேவையில்லை என்றும், தம்முடன் இணைந்தால், தாம் உதவி செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .