2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கூரையைப் பிரித்து கொள்ளை

George   / 2015 மார்ச் 24 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ்ப்பாணம் அல்வாய் கிழக்குப் பகுதியில் உள்ள ஆசிரியரின் வீட்டு கூரையைப் பிரித்து, உள்நுழைந்து அங்கிருந்த சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் நகை ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். 

ஆசிரியர்களான கணவன், மனைவி இருவரும், திங்கட்கிழமை(23) பாடசாலைக்கு சென்ற நிலையில், வீட்டுக்குள் நுழைந்து பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த 14 பவுண் நகைகள் (4 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய்), 46 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியன இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X