2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 05 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைப்பெற்றது.

இதில், தெதுறு ஓயா அணைக்கட்டு திட்டம், கற்பிட்டி பிரதேச சுற்றுலாத்துறை அபிவிருத்தி, பாடசாலை அபிவிருத்தி திட்டம், கமநெகும திட்டம், திவிநெகும திட்டம் உட்பட புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதேவேளை, கற்பிட்டி சுற்றுலாத்துறை அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது பிரதேச சூழலுக்கு பாதிப்படையாதவாறு அபிவிருத்தி பணிகளினை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய்பெர்ணான்டோ, வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜயசிங்க, அமைச்சர்களான தயாசிறி திசேரா, பிரியங்கர ஜெயரத்ன, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி, வடமேல் மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X