2025 மே 23, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி: இருவர் காயம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)
புத்தளம் சேர்விஸ் வீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியும் லொறியொன்றும் மோதிக்கொண்டதில இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்த பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த ஹாமிதா உம்மா (வயது 52) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இப்பெண்ணுடன்; பயணித்த அவரின் கணவனும் மகனும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொரியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X