2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

பிரேசிலுக்கான ஏற்றுமதி 37 வீதத்தால் அதிகரிக்கும்: அமைச்சர் றிசார்ட்

A.P.Mathan   / 2013 ஜனவரி 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து பிரேசிலுக்கான ஏற்றுமதி 37வீதத்தால் அதிகரிக்குமென அமைச்சர் றிசார்ட் பதியுதீன் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் பிரேசில் நாட்டின் பொருளாதார நிலை 7ஆம் இடத்தில் காணப்படுவதாகவும், 2011ஆம் ஆண்டில் 79 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பரஸ்பர வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்றதாகவும், இந்த ஆண்டில் இந்த தொகையை மேலும் 37 வீதத்தால் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான முன்னணி சீனி விநியோகத்தராக பிரேசில் அமைந்துள்ளது. கிளவுஸ், ஆடை உற்பத்திகள், டயர் வகைகள், இயற்கை இறப்பர் மற்றும் பருத்தி போன்றவற்றை பிரேசிலுக்கு இலங்கை ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .