2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை எண்ணெய் சேகரிப்பு நிலையத்தை அரசு மீளப்பெற திட்டம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் இந்தியாவின் ஐஓசி நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த திருகோணமலை சீனக்குடா எண்ணெய் சேகரிப்பு நிலையத்தை அரசு மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பெற்றோலியத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறும் பத்திரம் விரைவில் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

850 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த எண்ணெய் சேகரிப்பு நிலையம் அமைந்துள்ளதுடன், மொத்தமாக 99 தாங்கிகள் இப்பகுதியில் அமைந்துள்ளதுடன், இவற்றில் தலா 12,100 மெற்றரிக் தொன் எண்ணெய் சேகரித்து வைக்கக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .