2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தேசிக்கப்பட்டுள்ள கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்காக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த SMEC இன்டர்நஷனல் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்துக்கு ஆரம்ப கட்ட மதிப்பீட்டு பணிகளை மேற்கொண்டு, நிர்மாண வேலைகளை ஆரம்பிப்பதற்கான விலைமனுக் கோரல்களை தயாரிப்பதற்கான அங்கீகாரத்தை இலங்கை அரசு வழங்கியுள்ளதாகவும், இதற்காக 3.99 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களையும், 414 மில்லியன் இலங்கை ரூபாவையும் வழங்கியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்டமாக அமையவுள்ள இந்த கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை வத்தளை - எந்தேரமுல்ல பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு குருணாகலைக்கு அண்மையில் அமைந்துள்ள பெல்லந்தெனிய வரையில் அமையவுள்ளதுடன், மேலும் பொதுபிட்டியவிலிருந்து கண்டிக்கு அருகிலுள்ள ஹீதெனிய வரையில் இணைப்பு அதிவேக நெடுஞ்சாலையாகவும் அமையவுள்ளது.

பின்னர் இந்த அதிவேக நெடுஞ்சாலையை வடக்கில் யாழ்ப்பாணம் வரையிலும், கிழக்கில் திருகோணமலை வரையிலும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .