2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஒபெக் மற்றும் ஜப்பானிய நிதியுதவியில் இலங்கையில் புதிய பாலங்கள், வீதிகள்

A.P.Mathan   / 2013 ஜனவரி 18 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் 37 பாரிய பாலங்கள் நாட்டின் பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்காக ஜப்பானிடமிருந்து 18.57 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அத்துடன் கொழும்பை அண்டிய பகுதிகளில் வீதி விஸ்தரிப்பு பணிகளுக்கென 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒபெக் அமைப்பிடமிருந்து கடனாக பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த கடன்கள் 40 வருட காலத்தில் மீள் செலுத்தப்பட வேண்டியதுடன், 0.2 வீத வட்டி அறவிடப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த கடன் தொகையின் மூலம் கொழும்பின் 13 பிரதான வீதிகள் விஸ்தரிக்கப்படவுள்ளதுடன், 65 கிலோமீற்றர் தூரமான வீதி இதன் மூலம் விஸ்தரிக்கப்படவுள்ளது. நாவல-நுகேகொட பகுதியில் அமைந்துள்ள பாலமும் இந்த நிதியுதவியன் மூலம் விஸ்தரிக்கப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .