2026 ஏப்ரல் 11, சனிக்கிழமை

இத்தாலிய நாட்டின் முதலீடுகளை எதிர்பார்க்கிறது இலங்கை

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் இலங்கை-இத்தாலி வர்த்தக சபையின் மூலம் அண்மையில் இத்தாலிய நாட்டின் பொயிசானோ மாகாணத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் குழுவொன்றுக்கு இலங்கையில் முதலீட்டு திட்டங்களை மேற்கொள்வதற்கு நிலவும் சூழ்நிலை எனும் தலைப்பில் கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கருத்தரங்கில் பங்குபற்றிய இத்தாலியின் முதலீட்டாளர்கள் குழு, நாட்டில் சுற்றுலாத்துறை தொடர்பாக முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய சிறந்த சூழ்நிலை காணப்படுவதாக கருத்து வெளியிட்டுள்ளது.

தற்போது பொயிசானோ மாகாணமானது, இலங்கையில் இருவேறு செயற்திட்டங்களுக்கு தமது பங்களிப்பை வழங்கி வருகிறது. பாணந்துறை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்புத் திட்டமொன்றுக்கும், மெதிரிகிரிய பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டத்துக்கும் நிதியுதவிகளை வழங்கி வருகிறது.

இதனை தொடர்ந்து, இலங்கையில் இத்தாலியின் முதலீடுகள் உள்வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக இலங்கை வர்த்தக சம்மேளனம் கருத்து தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .