2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, பங்கு கொடுக்கல் வாங்கல்கள் சீரான நிலையில்

Kogilavani   / 2013 ஏப்ரல் 11 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுவருட கொண்டாட்டங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் கைமாறல்கள் போன்ற நிலைகளின் மூலம் வருடத்தில் பதிவு செய்யப்பட்ட அதியுயர் பெறுமதியை இலங்கை ரூபா பதிவு செய்துள்ளதாக முகவர்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் 125.40/50 ஆக பதிவாகியருந்தது.

கடந்த 2012 ஏப்ரல் 9ஆம் திகதியின் பின்னர் பதிவு செய்யப்பட்டிருந்த ஆக உயர்வான பெறுமதி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பிணையை இலங்கை வங்கி வழங்கவுள்ள நிலையில், எதிர்வரும் வாரங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உறுதியடையக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக முகவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு பங்குச் சந்தை கொடுக்கல் வாங்கல்கள் இரண்டு மாத காலப்பகுதியில் பதிவு செய்திருந்த உயர்வான பெறுமதியை நேற்றைய தினம் பதிவு செய்திருந்தன. ஆயினும் பல முதலீட்டாளர்கள் விடுமுறையில் சென்றிருந்தமையால் குறைந்தளவு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகளவில் காணப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் பங்கு கொடுக்கல் வாங்கல்கள் நிறைவடைந்த பொழுது, அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 5794.30 ஆகவும், S&P SL20 விலைச்சுட்டெண் 3322.49 ஆகவும் பதிவாகியிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .