2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பங்குச்சந்தை நடவடிக்கைகள் மீண்டும் உயர்வு

A.P.Mathan   / 2013 மே 30 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நேற்று புதன்கிழமை (29) நிறைவடைந்திருந்த பொழுது, மீண்டும் உயர்வான பெறுமதிகளை பதிவு செய்திருந்தன. வங்கிகளின் பங்குகள் மற்றும் சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஆர்வம் காரணமாக இந்த உயர்வான நிலையை பதிவு செய்ய முடிந்ததாக பங்கு முகவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
 
பிரதான பங்கு விலைச்சுட்டெண் 21.11 புள்ளிகள் அதிகரித்து 6455.81 ஆக பதிவாகியிருந்தது. தொடர்ச்சியான சிறியளவிலான பங்குதாரர்கள் அதிகளவு பங்கு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக இந்த பெறுமதி கடந்த செவ்வாய்க்கிழமை பதிவாகியிருந்த பெறுமதியை விட உயர்வாக நிறைவடைய ஏதுவாக அமைந்ததாக குறித்த பங்கு முகவர் மேலும் தெரிவித்திருந்தார்.
 
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்றைய தினம் 102.5 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்திருந்ததாகவும், மொத்த புரள்வு பெறுமதி 906.1 மில்லியன் ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 126.48/55 ஆக பதிவாகியிருந்ததாக நாணயமாற்று முகவர் தெரிவித்திருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .