Freelancer / 2023 ஏப்ரல் 05 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளம் சுமார் 3,000 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள போதும், அதன் புனரமைப்பு பணிகளில் பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்படுகின்றன.
இந்த நிலையில், குளத்தில் உள்ள நீர், தற்போது நீர் பாசன கால்வாய் ஊடாக வெளியேறி வருகின்றது. அதாவது, சிறுபோக செய்கைக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
நாளாந்தம் பெருமளவான நீர் வாய்க்கால் வழியாக வெளியேறி, கழிவு நிலங்களிலும் விவசாய நிலங்களிலும் தேங்கிக் காணப்படுகின்றன. இவ்வாறு குளத்தின் புனரமைப்பு பணிகளில் உள்ள குறைபாடு காரணமாகவே, தண்ணீர் வெளியேறி வருவதாக விவசாயிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். R
15 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago