Editorial / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன், ரொமேஷ் மதுசங்க
வவுனியா – கூமாங்குளம் பகுதியில், தோட்டமொன்றில் இருந்த கிணற்றுக்குள் இருந்து இன்று (15) காலை தாய் மற்றும் சிறுவன் ஆகியோரின் சடலங்களை மீட்டுள்ளதாக, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றுக் காலை கணவர் வேலைக்குச் செல்வற்காக, வீட்டைவிட்டு வெளியேறியப் பின்னர், அயல்வீட்டுப் பெண் ஒருவர் அவ்வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் யாரும் இருக்கவில்லை. பின்னர். வீட்டை அண்டிய பகுதியில் தேடிய போது, தோட்டத்திலுள்ள கிணறொன்றில் தாயும் பிள்ளையும் சடலமாக மிதந்துள்ளனர்.
இதையடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவலர் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு வரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.
இதன்போது, மயூரன் ராஜினி (வயது 33), அவரது பிள்ளை மயூரன் சஸ்வின் (வயது 4) சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸார் தற்கொலை அல்லது கொலை செய்தவர்களின் இறப்புக்கள் தொடர்பாக மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்களின் இறந்த உடல்களின் பிந்தைய மரண விசாரணையை மேற்கொள்வதற்காக வவுனியா பொலிஸ் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது
7 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
1 hours ago
1 hours ago