Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வடக்கு மாகாண மக்களிடம், தீராத வலிகள் இருப்பதாகவும் அவற்றை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைகள் பல இருப்பதாகவும் அதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கோரியதாகவும், அவரது கோரிக்கைக்கமைய, வலிகளைச் சுமந்த வடக்கு மாகாண மக்களுக்காகத் தன்னை அர்ப்பணிப்பதாக, வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்றுள்ள பி.எஸ்.எம்.சார்ள்ஸை வரவேற்கும் நிகழ்வு, வவுனியாவில், தமிழ் விருட்சத்தின் தலைவர் செ. சந்திரகுமார் தலைமையில், இன்று (02) நடைபெற்றது. இதன்போது, ஏற்புரை நிகழ்த்திய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய வடமாகாண ஆளுநர், பாரிய பொறுப்பொன்று தனக்குச் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய சேவைக் காலம் இன்னும் முடிவுறவில்லையெனவும், இளைப்பாறுவதற்கு முன்பே தான் இளைப்பாற வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026