2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் தொடர் சோதனை நடவடிக்கை

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க  அகரன்

வவுனியா - புளியங்குளம் பகுதியில், நேற்று முன்தினம் (27) இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 5 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன்  மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஓமந்தை, புளியங்குளம், அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாள்களாக,  மோப்ப நாயின் உதவியுடன்  சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், நேற்று முன்தினம் (27), புளியங்குளம் - புதூர் பகுதியில் உள்ள இராணுவச் சோதனை சாவடியில் வைத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை வழி மறித்து சோதனை செய்த போது, பணயப் பொதியில், 5 கிலோகிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த மூவரை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X