2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உலக மீனவர் தினம் அனுஷ்டிப்பு

George   / 2016 நவம்பர் 21 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

“காணி மற்றும் கடலின் ஆட்சியுரிமையை, அதை நம்பி வாழும் மக்களுக்கே உரித்தாக்கி உணவு தன்னாதிக்கத்தை வெற்றி கொள்வோம்” என்னும் தொனிப் பொருளில் இவ்வாண்டு உலக மீனவர் தினத்தை மீனவர்கள் அனுஷ்டித்தனர்.

வவுனியா அருந்ததி விருந்தினர் விடுதியில் உலக மீனவர் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது, வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அன்னிய மீனவர்களின் ஊடுருவல், மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு- கிழக்கு இணைப்பாளர் அன்டனி யேசுதாசன், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.என்.ஆலம், வடமாகாண கடற்தொழிலாளர் அமையத்தின் நிர்வாக குழுவினர், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .