Editorial / 2017 ஜூன் 21 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனதை மயக்கும் வசீகரப் பொருள்களை வாங்குவதற்கு அவசரப்பட வேண்டாம். இன்றைய நவீன உலகில், இலத்திரனியல் சாதனங்கள், அழகுச்சாதனப் பொருள்களின் தரத்தை அறியாமல், பணத்தை மனம்போன போக்கில் செலவழித்து இழத்தலாகாது.
பொருள்களின் மீது அதீத ஆசைகொண்டால், பணம் படைத்தவர்கள் அதை வெகுசுலபமாக வாங்கி விடுவார்கள். இருக்கும் கறுப்புப் பணத்தை வைத்திருந்து என்னதான் செய்வது?
ஆனால், நடுத்தர வர்க்க மக்களுக்கோ, ஆடம்பர இலத்திரனியல் பொருள்களை, வாகனங்களை கடன் அடிப்படையில் கொள்ளைக்காரக் கொம்பனிகளிடமிருந்து கொள்வனவு செய்து, படும் அவஸ்தைகள் கொஞ்சநஞ்சமானது அல்ல.
ஆனால், ஏழைகளுக்கு இந்தப் பிரச்சினையே கிடையாது. சுமாரான எளிய உணவு, படுக்க, சமைக்க குடிசை மட்டுமே போதுமானது எனத் திருப்திப்பட்டுக் கொள்வார்கள். அடங்காத ஆசைகள் ஆபத்தானது. இருக்கின்ற களிப்பை இழத்தலாகாது.
வாழ்வியல் தரிசனம் 21/06/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Apr 2026
12 Apr 2026