Princiya Dixci / 2017 பெப்ரவரி 28 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெஞ்சில் உறுதியான எண்ணங்களைக் கொண்டவர்கள் இரகசியங்களைக் கசியவிடமாட்டார்கள். வலிந்து மற்றையவர்களின் அந்தரங்கங்களை அறிய முற்படுவதும் அதனைச் சொல்வதும் ஏற்புடையதல்ல. பிரயோசனமற்ற விடயத்தில் கரிசனை எதற்கு?
இன்று சமூகத்தில் பல புல்லுருவிகள் நல்லவர்கள்போல் நடித்துவந்தால் அவர்களின் மறுபக்க இரகசியங்களை உலகுக்கு அம்பலப்படுத்தியேயாக வேண்டும்.
இதனால் மக்கள் எச்சரிக்கப்படுவதுடன் தப்புச் செய்பவர்களும் தங்களது செயல்களை மாற்றி, நல்வழியில் செல்லவும் ஏதுவாக இருக்கும்.
பழைமை மிக்க எமது வைத்திய முறைகள் இரகசியமாகவே பேணப்பட்டு, அவை இன்று எமக்குக் கிடைக்காமலே போய்விட்டன.
அறியாமையின் விளைவுகளைப் புரிந்துகொண்ட சமூகம், இனியாவது மக்களுக்குச் சேர வேண்டியதை மறைக்காமல் சேரச் செய்திடல் வேண்டும்.
விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை மறைத்தால் இந்த உலகத்தின் நிலை என்னவாக இருந்திருக்கும்?
சொல்லக்கூடாதவற்றைச் சொல்லும் நபர்கள், சொல்லக்கூடிய நல்ல விடயங்களை நாடவேண்டும்.
வாழ்வியல் தரிசனம் 28/02/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
40 minute ago
53 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
53 minute ago
55 minute ago
2 hours ago