Editorial / 2018 ஜூன் 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திறமையான அரசியல்வாதி யாரையும் நம்பிவிடமாட்டான். அவன் தனக்குள் புதைந்த இரகசியங்களை யாருக்கும் சொல்லவும் மாட்டான். அதேவேளை தனது தந்திரங்கள், நுட்பங்கள், காய்நகர்த்தல்களைத் தனது உயிர் நண்பனுக்குக் கூட சொல்லிக்கொடுக்கவும் மாட்டான்.
ஏனெனில், கூடத் திரியும் நண்பனே, அவனை எதிர்க்கும் கோடரிக்காம்பாக மாறவும் கூடும். இவை எல்லாம் உலக அரசியலில் சாதாரண விடயங்கள் தான்.
வெற்றி என்பதே, அரசியல்வாதியின் குறிக்கோளாகும். இந்த அரசியல் பயணங்களின் இடையே, அரங்கேறும் நாடகங்களில் நீதி, நியாயம், தன்மானம், கவலை, காட்டிக்கொடுத்தல், நம்பிக்கைத்துரோகம், நட்பைத் தேடுதல், நட்பை முறித்தல், போலிச்சோகத்தை வெளிப்படுத்தல், மற்றவரின் துன்பத்தில் உள்ளூர மகிழ்தல், பொய் - மெய்யைச் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு பேசுதல், மறுத்தல், ஏற்றுக்கொள்ளல் போன்ற பண்புகளை அரசியல்வாதிகள் தெரிந்தும் தெளிந்தும் வைத்திருக்கின்றனர்.
இவர்களுக்குள் நல்ல தலைவர்களும் இருல்லாமல் இல்லை.
வாழ்வியல் தரிசனம் 25/06/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Apr 2026
12 Apr 2026