Princiya Dixci / 2017 மே 10 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய அனுபவங்களும் இன்றைய விடாமுயற்சிகளும் நாளைய வெற்றிகளை நிலையாக உறுதிப்படுத்துகின்றன.
எனினும் இன்றைய நாள்தான், நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் உண்மையான நாள். ஏன் நொடிப்பொழுதில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம்தான் நிச்சமயமானதும் கூட.
பழைய கதைகள் மூலம் பல விடயங்களைக் கற்கமுடியும். ஆனால் அதுபற்றிச் சும்மா பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அதுபோல, எதிர்காலத்தில் இப்படி இருப்பேன் என கற்பனையை வளர்க்கும் மனிதன் அதனை யதார்த்தமாக நனவாக்காமல் இருப்பது சோம்பேறித்தனமானது.
நல்ல எண்ணங்கள் குதூகலத்தை ஏற்படுத்த வல்லது. அதே குதூகலத்துடன் காரியங்களை ஆற்ற முற்படுக. எந்த நாளும் சிலர் தங்களுக்கு நல்ல காலம் இல்லை என்பார்கள்.
காலஓட்டத்துக்கு பாகுபாடில்லை. எல்லா இரவும் பகலும் சகலருக்கும் பொதுவாகவே ஓடிக்கொண்டிருக்கின்றது.காலத்தைக் கைப்பற்றுங்கள்; நழுவவிடவேண்டாம்.
வாழ்வியல் தரிசனம் 10/05/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
11 Apr 2026
11 Apr 2026