Freelancer / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான பரராஜசிங்கம் சுஜீபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூலூடாக முனைகிறார் என தேரர் ஒருவர் ஊடக சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.
தேரர் நடத்திய ஊடக சந்திப்பு குறித்தும், புலம்பெயர் நாட்டை சேர்ந்த நபருக்கு எதிராக செய்தி வெளியிட்டதன் விளைவாகவும் சுஜீபன் கடந்த 29.06.2021 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணையகத்திற்கு விரிவான கடிதம் ஒன்றினை வழங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 13.12.2021 ஆம் திகதி இலக்கம் - QG 6961 என்னும் முச்சக்கரவண்டியில் கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்று கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
23 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago