Freelancer / 2022 நவம்பர் 24 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்
வவுனியா - கனகராயன்குளம் பகுதியில், பஸ் ஒன்றும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தங்காலையில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ், யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதில் இன்று (24) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். R



7 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
04 Nov 2025