Kogilavani / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதிஒருவர் தப்பியோடிய நிலையில்,ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வைத்தியசாலையின் மலசலகூடத்துக்குள் இருந்து கைதுசெய்யப்பட்ட சம்பவம் மொனராகலையில் செவ்வாய்க்கிழமை(20) இடம்பெற்றுள்ளது.
சுகயீனமுற்றிருந்த கைதியொருவரைப் பொலிஸார் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த நபரைத் திடீரெனக் காணவில்லை.
தேடுதலை மேற்கொண்ட பொலிஸார்,வைத்தியசாலையின் மலசலக்கூடத்தில் ஒளிந்திருந்த நிலையில் அந்நபரை -ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீண்டும் கைதுசெய்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
01 Feb 2026