Editorial / 2017 நவம்பர் 23 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொடகவெல- பல்லேபெத்த பிரதேசத்தில் வைத்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி ஒன்றின் மீது இன்று (23) அதிகாலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ்ஸின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்தத் தாக்குதலில் காயமடைந்த பஸ்ஸின் சாரதி கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கொடகவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026