2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த முதியவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 12 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான முதியவர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.பிரிங்கி நேற்று புதன்கிழமை (11) உத்தரவிட்டார்.

தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இறக்காமம் பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 கிராம் கஞ்சா போதைப் பொருளுடன் 60 வயதுடைய முதியவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இவரை புதன்கிழமை (11) திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி பொலிஸ் பிணையில் செல்ல  பொலிஸார் உத்தரவிட்டனர்.

இதற்கமைய, குறித்த நபர் புதன்கிழமை (12) அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜரானபோது இவருக்கு 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X