2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கொலை முயற்சியில் ஈடுபட்ட 6 பேருக்கு கடூழிய சிறைதண்டனை

Kogilavani   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் விஜயபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த ஆறு பேருக்கு 9 வருடங்களின் பின்னர் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் ஆறு பேருக்கும் வௌ;வேறாக இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டணையும் 102,000 ரூபா அபராதமும் விதித்து வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதவான் சுனந்த குமார தீர்ப்பளித்தார்.

கடந்த 2003ஆம் ஆண்டு ஜுலை மாதம் 7ஆந் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியொன்றில் சந்தேக நபர்கள் ஆறு பேரும் விஜயபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருரை கூரிய ஆயுதங்களால் தாக்கி, காயப்படுத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .