2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது

Suganthini Ratnam   / 2012 மே 24 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் ஹிராநகர் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்  பெண் ஒருவரை இன்று கைதுசெய்துள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தகுமார தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து  ஹிராநகர் பிரதேசத்தில் உள்ள இப்பெண்ணின் வீட்டை இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் சுற்றிவளைத்து சோதனையிட்டதாகவும் இதன்போது 8 கிராம் கஞ்சாவுடன் இப்பெண்ணை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.

கைதுசெய்யப்பட்டவரை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .