2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வலுவிழந்தோர் இல்லத்தில் சேவையாற்றிய பெண் ஊழியர் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 09 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகசேவை திணைக்களத்தினால் நடத்தப்படும் வலுவிழந்தோர் இல்லமொன்றில் சேவையாற்றி வந்த பெண்ணொருவர் கழுத்தில் சுருக்கிட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

மிகலேவ, பதவிகம பிரதேசத்தில் அமைந்துள்ள வலுவிழந்தோர் இல்லத்தில் இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

33 வயதான ஷானிகா பத்மகுமாரி என்ற பெண் ஊழியரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவரது சடலம் குறித்த இல்லத்திலுள்ள அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிகலேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .