2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

தலைமறைவாகியிருந்த முன்னாள் புலி உறுப்பினர் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 07 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                             (ஜிப்ரான்)
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை பிறக்கப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 10 மாதங்களாக தலைமறைவாகியிருந்த முன்னாள் விடுதலைப்  புலிகள் இயக்க உறுப்பினரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பால்குடியன் அல்லது கிளியரசன் என்ற இயக்கப் பெயரைக்கொண்ட குமாரசாமி லிங்கேஸ்வரன் என்ற முன்னாள் புலி உறுப்பினரே இவ்வாறு பொலிஸாரின் சுற்றிவளைப்பின் போது நொச்சிமுனை ஆறாம்குறிச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஆறுக்கும் அதிகமான கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில்  இவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. அதற்கு முன்னரும் மூன்று வீடு உடைப்பு சம்வங்கள் தொடர்பாக இவர் தேடப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நபரினால் கொள்ளையிடப்பட்ட ஒன்றரை பவுண் தங்க மாலை,  பெண்கள் துவிச்சக்கரவண்டி, இரண்டு மௌண்டன் பைக்கள், கையடக்க தொலைபேசிகள், வீட்டுத்தளபாடங்கள் அடங்கலாக பெருமளவு பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .